News

அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் வரட்சியான காலநிலை தொடருமானால் எதிர்வரும் நாட்களில் அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும் வரட்சியான காலநிலை தொடருமானால் எதிர்வரும் பெரும்போகம் தோல்வியடைந்தால் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் எனில் இந்தியாவில் இருந்து கூட அரிசியை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும் என அமைச்சர் எச்சரித்துள்ளார்.

தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு கால்நடை தீவனம் மற்றும் எத்தனோல் உற்பத்திக்கான அரிசி விநியோகத்தை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button