News
மாணவர் நலன் கருதி கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!
![](https://asalfm.com/wp-content/uploads/2023/03/64-780x470.jpg)
அடுத்த வருடத்திலிருந்து கல்வியமைச்சு விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது.
இது தொடர்பாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவிக்கையில்,
சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான விசேட வேலைத்திட்டம் அடுத்த வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி, அடுத்த வருடத்திலிருந்து, மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி, தகவல் தொழிநுட்பம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான ஆறு மாதகால பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இந்த பயிற்சி திட்டத்திற்காக முதற்கட்டமாக 320 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.