News

நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரையாற்றவுள்ள ரணில் விக்ரமசிங்க

சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பிலும் 13 ஆம் அரசியல் அமைப்பு தொடர்பிலும் அவர் உரையாற்றுவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இன்றையதினம் இடம்பெறவுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் விசேட உரையில், நாட்டின் பொருளாதார விடயங்கள் மற்றும் ஏனைய பல விடயங்கள் உள்ளடக்கப்படும் என அதிபர் ஊடக பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button