News

ஒக்டோபரில் இருந்து இலங்கைக்கு மற்றுமொரு நேரடி விமான சேவை

இஸ்ரேலிய விமான சேவை நிறுவனமான ஆர்கியா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

ஒக்டோபர் 31 முதல் டெல் அவிவ் மற்றும் கொழும்பு இடையே நேரடி விமான சேவையைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக ஆர்கியா விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நேரடி விமானங்கள் செவ்வாய்க்கிழமைகளில் இஸ்ரேலில் இருந்து புறப்படத் திட்டமிடப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்த விமானங்கள் புதன்கிழமைகளில் டெல் அவிவ் நகருக்கு புறப்படும் என்றும் கூறப்படுகிறது.

தான் ஆரம்பித்த ஒரு திட்டம் பலனடைவதைக் கண்டு மகிழ்ச்சியடைவதாக இஸ்ரேலுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் வருண வில்பத்த கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button