News

ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு!

ஓய்வுபெற்ற ஆசிரியர்களை மாகாண பாடசாலைகளுக்கு இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ரோஹினி குமாரி விஜேரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த வருடத்திற்கு ஒதுக்கப்பட்ட பணம் மாகாண சபைகளில் உள்ளதால் ஆட்களை இணைத்துக் கொள்ள முடியும் எனவும் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்ததன் பின்னர் அது தொடர்பில் மாகாண சபைகளுக்கு அறிவிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த ஆட்சேர்ப்புகளை மேற்கொண்டால் ஆசிரியர் பற்றாக்குறை ஓரளவு தவிர்க்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இவர்கள் அனைவரும் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பின்னரும் 26,000 வெற்றிடங்கள் காணப்படுவதாக சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button