News

வங்கி வட்டி வீதங்கள் தொடர்பான மத்திய வங்கியின் அறிவிப்பு

இந்த ஆண்டின் இறுதிக்குள் வங்கி வட்டி வீதங்களை ஒற்றை இலக்கத்திற்கு கொண்டு வர முடியும் என ஜனாதிபதியின் பணிக்குழாம் மட்ட பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் நேற்று(13.08.2023) அதிகார சபைக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது சிறு,நடுத்தர உரிமையாளர்கள் மீண்டும் வலுப்பெறுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொருளாதார நெருக்கடியின் போது, வங்கி வட்டி விகிதங்கள் 34 சதவீதமாக இருந்ததாகவும், ஆனால் இன்று அவை 16 முதல் 17 சதவீதமாக உள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button