News

கொழும்பில் நடத்துனர்களே இல்லாத பேரூந்து சேவை

கொழும்பிற்குள் சேவையில் ஈடுபடுத்துவதற்காக நடத்துனர்கள் இல்லாத பேருந்துகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இன்னும் 3 மாதங்களுக்குள் குறித்த பேரூந்து சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இலத்திரனியல் அட்டை மூலம் மட்டுமே பயணம் செய்யக் கூடியதாக இருக்கும், இந்த பேருந்துகளை இயக்குவதன் மூலம் கொழும்பில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button