News

கூகுள் நிறுவனத்திற்கு 30 இலட்சம் ரூபிள் அபராதம்

சிறப்பு இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.

இந்த போர் தொடர்பாக தவறான தகவல்கள் அடங்கிய பல்வேறு வீடியோக்களை யூடியூப்பில் பதிவேற்றம் செய்திருப்பதாக கூகுள் நிறுவனம் மீது ரஷ்யா குற்றச்சாட்டியுள்ளது.

இந்த வீடியோக்களை நீக்குமாறு கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்யா அறிவுறுத்தி இருந்தது. ஆனால் அவற்றை நீக்கவில்லை.

எனவே இது தொடர்பாக மாஸ்கோவில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் கூகுள் நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், கூகுள் நிறுவனத்திற்கு 30 இலட்சம் ரூபிள் அபராதம் விதித்துள்ளது.

முன்னதாக இதைப்போன்ற குற்றச்சாட்டில் ஆப்பிள் மற்றும் விக்கிபீடியா நிறுவனங்களுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button