News

இலங்கைக்கு வரவுள்ள சீன ஆராய்ச்சிக் கப்பல்! பெரும் குழப்பத்தில் வெளியுறவு அமைச்சு

இலங்கை கடற்பரப்பில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து புவிசார் அரசியல் போட்டியாளர்கள் சந்தேகம் கொண்டுள்ளதால் இலங்கைக்கு வரவிருக்கும் சீன ஆராய்ச்சிக் கப்பலான SHIYAN 6இற்கு அனுமதி வழங்குவதில் வெளியுறவு அமைச்சகம் குழப்பத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் உத்தரவின் கீழ் பயணிக்கும் இந்த ஆராய்ச்சி கப்பல் கடற்தொழில் அமைச்சின் கீழ் வரும் இலங்கை தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து ஆராய்ச்சியை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கமைய சீன அதிகாரிகள் அதற்கான அனுமதியை கோரியுள்ளனர். ஆனால் வெளியுறவு அமைச்சகம் இன்னும் முடிவு செய்யவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button