News

அதிகளவு மின்சார பேருந்துகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை தீர்மானம்

பொதுப் போக்குவரத்திற்காக கொள்வனவு செய்யப்படுகின்ற மின்சாரப் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேல் மாகாணத்தை உள்ளடக்கிய இலங்கை போக்குவரத்து சபையினால் இந்த விடயம் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு (2023) பெப்ரவரி மாதம் போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்காக 50 மின்சாரப் பேருந்துகளை அரச தனியார் கூட்டு திட்டமாக கொள்வனவு செய்வதற்காக முன் மொழியப்பட்ட திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

அதன்படி, இந்த திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்படும் மின்சார பேருந்துகளின் எண்ணிக்கையை 200 ஆக அதிகரிப்பதற்கு, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button