News

விலை அதிகரிப்பு குறித்து நடைமுறைக்கு வந்துள்ள புதிய தீர்மானம்!

கோதுமை மா இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த அனுமதிப் பத்திர முறை நீக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவு (29.08.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கோதுமை மா இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரி கிலோ ஒன்றுக்கு 16 ரூபாவிலிருந்து 27 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

இதன் காரணமாக கோதுமை மாவின் விலையில் அதிகரிப்பு ஏற்படாது எனவும் அவர் தெவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button