News

மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ”கியூஆர்” முறைமை – கஞ்சன விஜேசேகர

எதிர்காலத்தில் தேசிய எரிபொருள் அனுமதி அட்டை ”கியூஆர்” (QR) அமைப்பு மேம்பட்ட நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்டு, தரவு சேகரிப்பு மற்றும் தரவு பகுப்பாய்வுக்கான கருவியாக செயல்படுத்தப்படும் என்று மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் நிலவிய எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக அப்போது கியூஆர் முறையை அறிமுகப்படுத்தியதன் நோக்கம் இருக்கும் வளங்களை முகாமைத்துவம் செய்து விநியோக திட்டமாக நடைமுறைப்படுத்துவதே என அமைச்சர் கஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டினார்.

அப்போது நிலவி வந்த சமூக மற்றும் பொருளாதார பிரச்சனைகளை சமாளித்து நெருக்கடிகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு தற்போது மக்களின் வாழ்க்கை ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

65 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் மற்றும் வாகனங்கள் கியூஆர் அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 3,500 இலட்சத்துக்கும் அதிகமான எரிபொருள் விநியோக பரிவர்த்தனைகள் இந்த அமைப்பு மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கடந்த காலங்களில் அரசாங்கம் எடுத்த கொள்கை முடிவுகள், அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலை சூத்திரம் மற்றும் எரிபொருளுக்கு புதிய விநியோகஸ்தர்களை சேர்த்ததன் மூலம் எரிபொருள் இறக்குமதிக்கான நிதித் தேவைகள் நிர்வகிக்கப்பட்டதால், கியூஆர் குறியீடு இனி தேவைப்படாது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button