News

ரூபாயின் பெறுமதி நெருக்கடிக்கு முந்திய நிலைக்கு உயர வாய்ப்புள்ளது

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்குத் தேவையான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த முடிந்தால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வடைய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

ஏனெனில் இந்தச் சீர்திருத்தங்கள் நாட்டின் பொருளாதார அடிப்படைகளை மேம்படுத்த உதவும். இது முதலீட்டாளர்களுக்கு ரூபாயை மிகவும் கவர்ச்சிகரமான நாணயமாக மாற்றும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், சீர்திருத்தங்கள் வெற்றியடைந்தாலும் குறுகிய காலத்தில் ரூபாயின் மதிப்பு பலவீனமாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனெனில், நாட்டின் கடன் சுமை இன்னும் அதிகமாக இருப்பதால் ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து பொருளாதாரம் மீள்வதற்கு காலம் எடுக்கும்.

நீண்ட கால அடிப்படையில் இலங்கை சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைய முடிந்தால் ரூபாயின் மதிப்பு நெருக்கடிக்கு முந்திய நிலைக்கு உயர வாய்ப்புள்ளது. இருப்பினும் இதற்கு நேரமும் முயற்சியும் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்குத் தேவையான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த முடிந்தால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வடைய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

ஏனெனில் இந்தச் சீர்திருத்தங்கள் நாட்டின் பொருளாதார அடிப்படைகளை மேம்படுத்த உதவும். இது முதலீட்டாளர்களுக்கு ரூபாயை மிகவும் கவர்ச்சிகரமான நாணயமாக மாற்றும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், சீர்திருத்தங்கள் வெற்றியடைந்தாலும் குறுகிய காலத்தில் ரூபாயின் மதிப்பு பலவீனமாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனெனில், நாட்டின் கடன் சுமை இன்னும் அதிகமாக இருப்பதால் ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து பொருளாதாரம் மீள்வதற்கு காலம் எடுக்கும்.

நீண்ட கால அடிப்படையில் இலங்கை சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைய முடிந்தால் ரூபாயின் மதிப்பு நெருக்கடிக்கு முந்திய நிலைக்கு உயர வாய்ப்புள்ளது. இருப்பினும் இதற்கு நேரமும் முயற்சியும் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button