News

நாடு முழுவதும் நிறுவப்படவுள்ள சினோபெக் கிளைகள்!

சீன எரிபொருள் நிறுவனமான ‘சினோபெக்’ எதிர்வரும் 25ஆம் திகதிக்குள் நாடு முழுவதும் தமது கிளைகளை நிறுவவுள்ளதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சினோபெக் நிறுவனம் தமது முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை ஆரம்பித்துள்ளது.

நாடு பூராகவும் 150 நிலையங்களை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 இடங்களைத் தவிர ஏனைய நிலையங்களின் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவுஸ்திரேலிய யுனைடட் பெட்ரோலிய நிறுவனமும் இவ்வருடத்துக்குள் தமது சேவையை நாட்டில் ஆரம்பிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button