News

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான புதிய தகவல்

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான மீள் திருத்தத்திற்கான விண்ணப்பங்களை இன்று (07) முதல் மேற்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி பரீட்சார்த்திகள் எதிர்வரும் 16ஆம் திகதி வரை மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சை திணைக்களத்திற்கு சொந்தமான www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை, இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு மீண்டும் தோற்றவிருக்கும் கடந்த பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு மாத்திரம் எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button