News

பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஆரம்பம்!

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அழைப்பு இன்று (14) முதல் மேற்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை இணையவழி முறையின் ஊடாக அனுப்பி வைக்க முடியும் என அதன் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்களை WWW.UGC.AC.LK என்ற இணையதளத்தின் ஊடாக அனுப்பமுடியும் எனவும் இதற்காக ஒக்டோபர் 05 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சை முடிவுகள் கடந்த 04 ஆம் திகதி வெளியிடப்பட்டன.

பரீட்சைக்கு 263,933 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த நிலையில் அவர்களில் 166,938 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button