News

ஐஎம்எப் தொடர்பில் வெளியான தகவல்.

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கிய 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனானது, எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் என 45 சதவீதமான இலங்கையர்கள் நம்புவதாக வெரிட்டே ஆய்வு நிறுவனம் அண்மையில் நடத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

இதேவேளை இலங்கையின் பொருளாதாரத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் கடன், சாதகமான விளைவை ஏற்படுத்தும் என 28 சதவீதமானவர்கள் மாத்திரமே நம்புவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆய்வுக்காக 1,008 பேரிடம் வெரிட்டே ஆய்வு நிறுவனம் கருத்துக்களை சேகரித்திருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் நாட்டின் பொருளாதாரத்தை இப்போதும் எதிர்காலத்திலும் எவ்வாறு பாதிக்கும் என்ற கேள்வியின் அடிப்படையில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி, கிடைக்கப்பெற்ற விடைகளுக்கமைய. முடிவுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. குறித்த ஆய்வு கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டதாக வெரிட்டே ஆய்வு நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button