News

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு வழங்கப்பட்ட சலுகை

குறிப்பிட்ட சில வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலா பயணிகளிடம் இருந்து வீசா கட்டணத்தை அறவிட வேண்டாம் என்ற ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சீனா, ரஷ்யா, இந்தியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டணம் அறவிடப்பட மாட்டாது என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ கூறியுள்ளார்.

அத்தோடு, நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளதோடு, இந்த வருடத்தின் கடந்த மாதத்தில் மாத்திரம் ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 938 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நாட்டிற்கு வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 10 இலட்சத்தை கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button