News

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: அனைவருக்கும் நிவாரணம் வழங்க தீர்மானம்

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் அரசாங்கம் அறிந்துள்ளது.

பொருளாதார பிரச்சினைகளை விரைவில் தீர்த்து அனைத்து மக்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என கூறியுள்ளார்.

அத்துடன் கல்வி ஆய்வுகளுக்கான வரி விதிப்பு தொடர்பில் புதிய சுற்று நிரூபமொன்றை வெளியிடுவதற்கான இயலுமை தொடர்பில் ஆராய்ந்து, அடுத்த 3 வாரங்களுக்குள் தமக்கு அறிக்கையொன்றை சமர்பிக்குமாறு ரணில் விக்ரமசிங்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button