News

விவசாயிகளுக்கு அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்!

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு அடுத்த மாதம் முதல் வழங்கப்படுமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் 58,770 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட சிறுபோக செய்கை வறட்சி காரணமாக அழிவடைந்துள்ளது.

இதற்கமைய வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 53,965 ஆக மதிப்பிடப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான இழப்பீடும் வழங்கப்படவுள்ளது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button