News

24 மணிநேரமும் செயற்படவுள்ள தபால் நிலையங்கள்

போக்குவரத்து அபராதங்களை செலுத்துவதற்காக மேல் மாகாணத்தில் உள்ள பல தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும் என பிரதி தபால் மா அதிபர் காவல்துறை போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவுக்கு அறிவித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காவல்துறையினரால் வழங்கப்படும் தண்டப்பணம் செலுத்துதல், போக்குவரத்து தொடர்பாக செலுத்த வேண்டிய அபராதங்களை செலுத்துதல் மற்றும் ஏனைய தபால் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி 24 மணிநேர சேவை மேல் மாகாணத்தில் உள்ள பல தபால் நிலையங்களில் வழங்கப்படவுள்ளது.

பொரளை, வெள்ளவத்தை, ஹெவ்லொக் டவுன், தெஹிவளை, மொறட்டுவ, பாணந்துறை, களுத்துறை, கொட்டாஞ்சேனை, கொம்பன்னவீதிய, பத்தரமுல்ல, கல்கிசை, நுகேகொட மற்றும் சீதாவகபுர ஆகிய தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button