News

அரச ஊழியர்களுக்கான வெற்றிடங்கள்! பட்டதாரிகளுக்கு அழைப்பு

கணக்காய்வு அதிகாரிகளுக்கான சுமார் 400 பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கணக்காய்வு நடவடிக்கைகளை அதிகபட்ச முகாமைத்துவத்துடன் மேற்கொள்ள வேண்டியுள்ளதாக, கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்த பதவிக்கு பொருத்தமானவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கபட்டுள்ளது.

அதற்கமைய, உரிய தகுதிகளுடன் தற்போது அரச சேவையில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளிடமிருந்து இதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளது.

இதற்கான வர்த்தமானி விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button