News

அரசாங்க நிறுவனங்கள் மறுசீரமைக்கப்படும் : சஜித் தி்ட்டவட்டம்

அரசாங்க நிறுவனங்களை மறுசீரமைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் மக்களுக்கு நன்மை ஏற்படுத்தக் கூடிய வகையில், அரசாங்க நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கு தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நட்டமடையும் நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களில் பணியாற்றி வரும் பணியாளர்களது உரிமைகளை பாதிக்காத வகையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வரிச் செலுத்துவோரின் பணத்தைக் கொண்டு நட்டமடையும் நிறுவனங்கள் முன்னெடுப்பதில் பயனில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் அரச சொத்துக்களை விற்பனை செய்வதாக சஜித் தரப்பு குற்றம் சுமத்தி வரும் நிலையில் இவ்வாறான கருத்து வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button