News

முற்றாக தடைசெய்யப்படவுள்ள லஞ்ச் சீட்கள்!

அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்களை முற்றாக தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், அடுத்த ஆண்டு முதல் லஞ்ச் சீட் உற்பத்தி, இறக்குமதி மற்றும் விற்பனையை தடை செய்வது தொடர்பான சட்டப் பணிகளை மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சட்டத்திற்கமைய, மக்கும் லஞ்ச் சீட்களை உற்பத்தி செய்து இறக்குமதி செய்வதும் சாத்தியமில்லை என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க (Hemantha Jayasinghe) தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் முதல் பொலித்தீனால் செய்யப்பட்ட மக்காத லஞ்ச் சீட் உற்பத்தி மற்றும் விற்பனை தடைசெய்யப்பட்ட நிலையில் அன்றிலிருந்து மக்கும் தன்மை கொண்ட லஞ்ச் சீட் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டது.

ஆனால், தரமற்ற லஞ்ச் சீட் விற்பனையால் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், லஞ்ச் சீட்களை முற்றிலுமாக தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button