News

அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்த லங்கா சதொச நிறுவனம்

நாட்டில் இன்று (4) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

லங்கா சதொச நிறுவனம் குறித்த விலைக்குறைப்பை அறிவித்துள்ளது.

இதன்படி, உருளைக்கிழங்கு (சீனாவில் இருந்து இறக்குமதி), சிவப்பு பருப்பு மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றின் விலைகளே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது.

குறித்த விலைக் குறைப்பின் படி, ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், இதன் புதிய விலை 215 ரூபாவாக உள்ளது.

அத்தோடு, ஒரு கிலோகிராம் சிவப்பு பருப்பு 14 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், இதன் புதிய விலை 282 ரூபாவாக உள்ளது.

மேலும், ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், இதன் புதிய விலை 269 ரூபாவாக உள்ளது.

இந்தநிலையில், விலை குறைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை லங்கா சதொச விற்பனை நிலையங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என  இலங்கை சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button