News
		
	
	
ரணில் விக்ரமசிங்க தொடர்பில் முக்கிய தீர்மானத்தை எடுத்த மகிந்த ராஜபக்ச!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தனி வேட்பாளரை முன்வைக்காமல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் (Ranil Wickramasinghe) இணைந்து செயற்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksha) தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி வேட்பாளரை நியமிப்பது தொடர்பில் இடம்பெற்ற கூட்டத்தில் மஹிந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்கால பயணத்தை ரணிலுடன் செல்ல வேண்டும் என்பதோடு கட்சி என்ற ரீதியில் வேறு ஒருவரை வேட்பாளராக நியமிப்பது சரியில்லை எனவும் மகிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.




