News

பாடசாலை அதிபர்களுக்கு கல்வியமைச்சின் மகிழ்ச்சியான அறிவிப்பு!

பாடசாலை அதிபர் சேவைக்கான பதவி உயர்வுக்காக இதுவரையில் நடைமுறையில் இருக்கும் ஆங்கில மொழி வினாத்தாளை நீக்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதிக எண்ணிக்கையிலான அதிபர்கள் ஆங்கில வினாத் தாளில் சித்தியடையத் தவறியதே இதற்குக் காரணம் ஆங்கிலம் தவிர, பதவி உயர்வுக்கான நுண்ணறிவு தேர்வில் தேர்ச்சி பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டது.

புதிய முடிவின்படி, நுண்ணறிவு தேர்வுடன் எளிய ஆங்கில மொழி வினாத்தாள் தயாரிக்கப்பட உள்ளது. அதிபர் சேவையின் தொழில்சார் சங்கங்களின் பலமான கோரிக்கை காரணமாக ஆங்கில மொழிக்கான தனியான வினாத்தாள் வழங்கப்படுவதில்லை என அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதேவேளை, அதிபர் ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு தொடர்பில் சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலப் பரீட்சைகளுக்கு மேலதிகமாக ஆங்கில மொழியிலும் பரீட்சைகளை நடத்துவதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த திருத்தங்கள் பிரதான அதிபர் சேவை அரசியலமைப்பில் உள்ளடக்கப்படும் என அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புதிய முறையின் பிரகாரம் அதிபர்கள் ஆட்சேர்ப்புக்கான முதற்கட்ட பரீட்சை இவ்வருட இறுதிக்குள் நடத்தப்பட உள்ளது. தற்போது சேவையின் மூன்றாம் தரத்தில் காலியிடங்களின் எண்ணிக்கை 1800 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button