News

8 ஆண்டுகளின் பின்னர் இங்கிலாந்து மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கியுள்ள இலங்கை

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது.

எட்டு ஆண்டுகளின் பின்னர் டெஸ்ட் தொடர் ஒன்றில் ஆடுவதற்காக இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி கடும் சவாலுக்கு மத்தியிலேயே இந்த டெஸ்ட் தொடரில் களமிறங்கவுள்ளது

குறித்த போட்டி இங்கிலாந்தின் மென்செஸ்டரில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலஙடகை அணி முதலில் துடுபாட்டத்தை தேர்வு செய்துள்ளது.

இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள பதினொருவரின் விபரங்களை நேற்று இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டது.

இதன்படி முதலாவது டெஸ்ட் போட்டியில் நிசான் மதுஷ்க, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெத்யூஸ், தனஞ்ஜய டி சில்வா, தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், பிரபாத் ஜெயசூரிய, மிலான் ரத்நாயக்க, அசித பெர்னாண்டோ மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.

அத்துடன் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வேகப்பந்து வீச்சாளரான மிலான் ரத்நாயக்க இன்று இலங்கை அணிக்காக டெஸ்ட் அறிமுகத்தைப் பெறவுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button