News

எரிவாயு விலை தொடர்பில் மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

உலக சந்தையில் எரிவாயு விலைகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் பெப்ரவரி மாதத்தில் பொதுமக்களுக்கு மிகவும் மலிவு விலையில் எரிவாயுவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தை புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கையெழுத்திடும் நிகழ்வொன்றின் போது, லாஃப்ஸ் எரிவாயு குழும தலைமை நிர்வாக அதிகாரி நிரோஷன் ஜே. பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்துகளை தெரிவித்த நிர்வாக அதிகாரி, லாஃப்ஸ் வாயுவுக்கு எந்தப் பற்றாக்குறையும் இல்லை என்றும், தற்போது அம்பாந்தோட்டை முனையத்தில் இருபதாயிரம் மெட்ரிக் டன் லாஃப்ஸ் எரிவாயு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், ஜனவரி மாதம் லாஃப் எரிவாயு விலை திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன், இம்மாதத்தில் எரிவாயு விலையை பழைய விலை மட்டத்திலேயே தொடர நிறுவனம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button