News

வரவு – செலவுத்திட்டம் – பலப்படுத்தப்படும் நாடாளுமன்றின் பாதுகாப்பு!

எதிர்வரும் பெப்ரவரி 17, அன்று வரவு – செலவுத்திட்டம் தாக்கல் செய்யப்படுவதற்கு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் நாடாளுமன்றத்தில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ் (Rizvy Salih) அறிவித்துள்ளார்.

அதன்படி, பொது வாகன நிறுத்துமிடம் மூடப்படும் அதே நேரத்தில் எம்.பி.க்கள் தங்கள் வாழ்க்கைத் துணைவர்களை மட்டுமே அழைத்து வருமாறும், வேறு எந்த விருந்தினர்களையும் அழைத்து வரக்கூடாது என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்கு மட்டுமே நாடாளுமன்ற காட்சியகம் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button