News

இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ்: வெளியாகிய புதிய தகவல்

மலேசியா மற்றும் இந்தியாவில் பரவி வரும் கொரோனா மாறுபாடு இலங்கையில் பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்க்கான விசேட வைத்திய நிபுணர் ஜூட் ஜயமஹா தெரிவித்துள்ளார்.

நடத்தப்பட்ட சோதனைகளின்படி, கொரோனா ஓமிக்ரான் மாறுபாடு, LF. I மற்றும் NB 1.8.1, இலங்கையில் பரவுவது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஜெயமஹா குறிப்பிட்டுள்ளார்.

கர்ப்பிணித் தாய்மார்கள், வயதான பெண்கள் மற்றும் பலவீனமான நோயாளிகள் தங்கள் சுயபாதுகாப்பை கவனித்துக் கொள்ள வேண்டும் வைத்திய நிபுணர் வலியுறுத்தியுள்ளார்.

அதன்படி, அவர்கள் முகமூடி அணிவது, கைகளை கழுவுவது மற்றும் நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது போன்ற சுகாதாரப் பழக்கங்களைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாகாணங்கள் மற்றும் பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வைத்தியசாலைகளில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தொடர்ந்து பரிசோதிப்பதாகவும் வைத்திய நிபுணர் ஜூட் ஜயமஹா குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய கொரோனா மாறுபாடு பொதுவாக குறிப்பிட்ட நேரங்களில் பரவுகிறது என்றும், அதைப் பற்றி தேவையற்ற அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button