News

சட்டவிரோத சொத்துக்கள் அரசுடமையாக்க நடவடிக்கை.

சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை வழங்க வேண்டிய நபர்கள் தங்களது அறிக்கையில் மறைக்கும் சொத்துக்களை அரசுடமையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய ஊழல் மோசடி எதிர்ப்பு சட்டத்தின் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 30ம் திகதிக்கு முன்னதாக தங்களது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை சமர்ப்பிக்க வேண்டுமென அவ்வாறு செய்யத் தவறுவோருக்கு முதல் இரண்டு வாரங்களில் எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் இரண்டு மாத காலப் பகுதிக்குள் குறித்த நபருக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் குறித்த நபருக்கு எதிராக ஒரு லட்சம் ரூபா அபராதமும் சிறைத்தண்டனையும் வழங்குவதற்கு சட்டத்தில் இடமுண்டு என லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை வெளியிட வேண்டிய அரசியல்வாதிகள் மற்றம் அரசாங்க அதிகாரிகள் தங்களது சொத்துக்கள் பற்றிய விபரங்களை வெளியிடத் தவறினால் அவ்வாறான சொத்துக்களை அரசுடமையாக்க சட்டத்தில் இடமுண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.

2023ம் ஆண்டு 9ம் இலக்க ஊழல் மோசடி எதிர்ப்பு சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச உயர் அதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களது சொத்து விபரங்களை வெளியிட வேண்டுமென தெரிவிக்கப்படுகின்றது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button