News

குறைக்கப்படும் எம்பிக்களுக்கான காப்பீட்டு தொகை: கிடைத்தது அனுமதி

ரூ.10 லட்சமாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குழுக் காப்பீட்டு தொகையை, ரூ.2.5 லட்சமாக குறைக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த திருத்தமானது, 2025 ஒக்டோபர் 9ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளது.

இது தொடர்பான முன்மொழிவானது, பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபாலாவால் முன்வைக்கப்பட்டது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்வைத்த வரவுசெலவுத் திட்ட பரிந்துரையின் படி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் சிறப்பு நலன்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2023 மே மாதத்தில் அறிமுகமான குழுக் காப்பீட்டு திட்டத்தின் கீழ், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருககும் ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை காப்பீடு வழங்கப்பட்டு வந்தது.

புதிய தீர்மானத்தின் படி, எதிர்வரும் காப்பீட்டு ஆண்டுக்கான வரம்பாக ரூ.2.5 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 2025 ஒக்டோபரில் தொடங்கும் காப்பீட்டு வருடத்திற்கு பயன்படுத்தப்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button