News

பொது மக்களுக்கு சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்

நாட்டின் கோவிட்அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும், கோவிட் நோயாளர்களைக் கண்டறியும் பரிசோதனைகள் பரந்த அளவில் மேற்கொள்ளப்படாமையால் பொதுமக்கள் பாரிய சுகாதார பிரச்சினையை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இன்றைய தினம் (17.05.2023)) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமது சொந்த வாழ்க்கையின் பாதுகாப்பிற்காக மீண்டும் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள்.

சாதாரண மட்டத்தில், சில வைரஸ் நோய்கள் மற்றும் கோவிட் என்று சந்தேகிக்கக்கூடிய ஒரு நோய் பெரிய அளவில் பரவுகின்றதுடன், பாடசாலைகள் மற்றும் அலுவலகங்களில் இது ஒரு தொற்றுநோயாகப் பரவி வருகின்றன.

எனவே பொதுமக்களாகிய நாம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். குறிப்பாக கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக நாம் முன்னர் அறிமுகப்படுத்திய சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றவேண்டும்.

குறிப்பாக கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது மற்றும் சுவாச மண்டலத்தின் சுகாதாரத்தைப் பராமரிப்பது ஆகியவை மிகவும் முக்கியமானவை.

அத்துடன், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெளியே செல்லாமல் இருப்பதும், முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குவதும் உங்கள் ஆரோக்கியத்தையும் உயிரையும் பாதுகாக்க உதவும்.

இந்த நிலமை கோவிட் தொற்றா? இத்தகைய தொற்றுநோய் பரவி ஏதேனும் பேரழிவை ஏற்படுத்துமா? என்பது குறித்து உறுதிப்படுத்த முடியாது.

இந்த தொற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் இறக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே உறுதி செய்யப்படுகிறது. எனவே, உங்கள் வாழ்க்கையின் பாதுகாப்பிற்காக முன்னர் வழங்கப்பட்ட அனைத்து சுகாதார ஆலோசனைகளையும் கண்டிப்பாகப் பின்பற்றுவது மிகவும் முக்கியம்.” என அவர் தெரிவித்துள்ளார் .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button