News

இலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

விசா இல்லாத வெளிநாட்டவர்களையும் இந்த நாட்டில் குடியுரிமை இல்லாத இலங்கையர்களையும் கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

இந்தச் சுற்றிவளைப்பின் போது இந்த மாதம் சுமார் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்களில் சில வெளிநாட்டவர்கள் நாட்டின் பல்வேறு துறைகளில் பணிபுரிந்துள்ளனர்.

வீசா காலாவதியான அனைத்து நபர்களையும் கைது செய்து நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button