News

பேருந்து கட்டணங்களை செலுத்துவதற்கு அறிமுகமாகும் புதிய திட்டம்!

இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளின் கட்டணத்தை செலுத்துவதற்கு பயணிகளுக்கு புதிய முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில், கியூஆர் முறை மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்துவதற்கான முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதனை, போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பேருந்துகளில் பயண சீட்டுகளை பெற்றுக் கொள்ள பணம் செலுத்துவதற்கு பதிலாக இந்த கியூஆர் அட்டையை பயன்படுத்தி பயண சீட்டைப் பெற முடியும்.

குறித்த திட்டம் இவ்வருட இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button