News

இலங்கையில் சுட்டெரிக்கும் வெயில் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் வெப்பமான காலநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக கால்நடைகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உள்ளூர் பால் உற்பத்தி நிறுவனமான மில்கோ, கால்நடை பண்ணையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இன்று (14) மேல், தெற்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் குருநாகல், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் அதிக வெப்பம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறுவதாக மில்கோ அறிவித்துள்ளது.

இதன் மூலம், கால்நடை வளர்ப்பாளர்களை தங்கள் கால்நடைகளை காப்பகங்களுக்குள் வைப்பதன் மூலம் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும், இந்த காலகட்டத்தில் குடிப்பதற்கு போதுமான தண்ணீரை வழங்குமாறும் மில்கோ வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button