News

அரசுக்கு 113 கிடைக்குமா : 24 ஆம் திகதி மற்றுமொரு பலப்பரீட்சை..!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவதற்கான பிரேரணைமீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் தற்போது அது நிறைவேற்றப்படுமா என்பது தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.

ஆளுங்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 10 அமைச்சர்கள் தற்போது வெளிநாட்டில் இருப்பதே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது என சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்தில் 120 எம்.பி.க்கள் காணப்படுகின்றனர்.

எனினும் இந்த 10 பேரும் வாக்குப்பதிவின் போது அவையில் இல்லை என்றால் எம்.பி.க்களின் எண்ணிக்கை 110தாகா குறைந்துவிடும் .

இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமானால், அன்றைய தினம் ஆளும் கட்சி 113 உறுப்பினர்களின் பெரும்பான்மையைப் பெற வேண்டும்.

இதற்கு மேலதிகமாக மொட்டு கட்சியில் உள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே மஹிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரை சந்தித்து, தமது மனசாட்சிக்கு இணங்க இந்த பிரேரணைக்கு வாக்களிக்க முடியாது என தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தக் குழுவில் சுமார் 20 எம்.பி.க்கள் உள்ளடங்குவதாகத் தெரியவருகிறது. எனினும், குறித்த பிரேரணை நிச்சயம் நிறைவேறும் என ஆளுங்கட்சி அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button