News

புதிய ஆளுநராக பதவி ஏற்கிறார் நவீன் திசாநாயக்க

சப்ரகமுவ மாகாணத்திற்கான புதிய ஆளுநராக ஐக்கியதேசிய கட்சியின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நவீன் திசாநாயக்க எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பதவி ஏற்கவிருப்பதாக அதிபரின் ஆலோசகர் ருவன் விஜயவர்தன தெரிவித்தள்ளார்.

பியகமவில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாணத்தின் ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ கடந்த 8ஆம் திகதி அதிபருக்கு அனுப்பிய கடிதத்தின் மூலமாக தனது பதவியை இராஜினாமா செய்த நிலையில் குறித்த பதவி வெற்றிடமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button