News

சூதாட்டத்தை ஒழுங்குப்படுத்த அதிகாரசபை

சூதாட்டத்தை ஒழுங்குப்படுத்தும் அதிகாரசபையை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

சூதாட்டத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் வரி வருவாயை முறையாக சேகரிப்பது, சூதாட்ட நடவடிக்கைகள் தொடர்பான குற்றச் செயல்களைத் தடுப்பது மற்றும் தனிநபர்களுக்கும் சமூகத்திற்கும் சூதாட்டத்தின் எதிர்மறையான விளைவுகளைக் குறைத்தல் போன்ற பணிகள் இதன் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்படி, அனைத்து சூதாட்ட செயற்பாளா்களுக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் சூதாட்டத்தை ஒழுங்குப்படுத்துவதற்காக ஒழுங்கமைப்பு நிறுவனம் ஒன்றை நிறுவ வேண்டிய அவசியம் இனங்காணப்பட்டது.

இந்த ஒழுங்குமுறை அமைப்பை நிறுவுவதற்கான சட்டமூலத்தை தயாரிக்குமாறு உரிய குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button