News

உதவித் திட்டம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டோர் நலத்திட்ட உதவிகளுக்கு தகுதியானோர் பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவால் தெரிவித்துள்ளார்.

இதேவேளை“அஸ்வெசும” பயனாளிகள் பட்டியல் தொடர்பான மேன்முறையீடுகள் அல்லது ஆட்சேபனைகளை இதுவரையில் யாராவது சமர்ப்பிக்கவில்லையெனில் சமர்பிப்பதற்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.

மேன்முறையீட்டுச் செயற்பாடுகள் திருப்தியடையாத பட்சத்தில், சம்பந்தப்பட்ட மேன்முறையீடுகளின் பிரதியை ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு தொழிற்சங்கங்களின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

மேலும், ஏனைய அரசியல் கட்சிகளின் தேவைகளுக்காக அஸ்வெசுன நலன்புரி திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க முன்வர வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button