News

அரச சேவைக்கான புதிய ஆட்சேர்ப்பு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

அடுத்த வருடமும் அரச சேவைக்கான புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது என திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டுக்கான பாதீடு மதிப்பீட்டு வழிகாட்டுதல்களை வெளியிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதியில், உள்ள அரச சேவையாளர்களின் எண்ணிக்கைக்கு அமையவே அடுத்த ஆண்டுக்கான வேதனம் உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகளுக்காக நிதி நிர்ணயிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும். அரச நிறுவனங்களுக்கான தளபாடங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதை இயலுமான வரையில், மட்டுப்படுத்துமாறு திறைசேரியின் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

ஆட்சேர்ப்பு நடைமுறை மற்றும் சுற்றறிக்கைகள் மூலம் பரிந்துரைக்கப்பட்டால் மாத்திரமே, தேசிய பயிற்சிகள் வழங்கப்படும் என மஹிந்த சிறிவர்தன வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button