News

ஜனாதிபதி ரணில் – இந்திய வெளிவிவகார செயலாளர் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ராவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் இன்றைய தினம் (11.07.2023) இடம்பெற்றதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 20ஆம் திகதி, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

அது தொடர்பான ஒருங்கிணைப்பு ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்திய வெளிவகார செயலாளர் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button