News

அஸ்வெசும பயனாளிகளுக்கு நற்செய்தி

அஸ்வெசும சமூக நலத்திட்ட கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அஸ்வெசும சமூக நல உதவிகளை வழங்குவதற்காக வங்கிக் கணக்கு தொடங்காதவர்களுக்கு உடனடியாக வங்கிக் கணக்குகள் திறக்கப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தற்போதைய நாட்களில், அஸ்வெசும வேலைத்திட்டம் தொடர்பான விண்ணப்பங்களைத் தாக்கல் செய்தல் மற்றும் வங்கிக் கணக்குகளை ஆரம்பிக்கும் பணிகள் பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button