News

தொடருந்து சேவை கட்டண அதிகரிப்பு: வெளியான அதி விசேட வர்த்தமானி

தொடருந்துகளில் பொதிகளை அனுப்புவதற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது.

இக்கட்டண அதிகரிப்பானது இன்று (01.2.2024) முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டணங்களை திருத்தம் செய்து, அதி விசேட வர்த்தமானி அறிவித்தலானது கடந்த 18ம் திகதி போக்குவரத்த அமைச்சர் பந்துல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய ரூ. 50 குறைந்த பட்ச கட்டணம் ரூ. 150 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button