News

நாடு திரும்பும் பசில் : ரணிலை சந்திக்கவுள்ளதாகவும் தகவல்!

அமெரிக்காவில் தற்போது தங்கியுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச எதிர்வரும் 18 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை முன்னிட்டு அவர் நாடு திரும்பவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன.

பசில் ராஜபக்ச கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி அமெரிக்காவுக்கு பயணம் செய்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது சுமார் ஒன்றரை மாதங்களுக்கு பின்னர்,  அவர் மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பசில் ராஜபக்ச நாடு திரும்பியதன் பின்னர், சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

அடுத்த அதிபர் தேர்தல் தொடர்பில் முடிவெடுக்கும் நோக்கில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அதிபர் தேர்தலில் தனக்கு ஆதரவு வழங்குமாறு மொட்டு கட்சியிடம் ரணில் விக்ரமசிங்க கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button