News

பதவி வேண்டாம் – ரணில் தருவார் – மஹிந்த அதிரடி அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியை ஏற்குமாறு கட்சி உறுப்பினர்கள் சிலர் அழுத்தம் பிரயோகித்து வருவதாக தெரியவந்துள்ளது.
எனினும் மஹிந்த ராஜபக்ச அதற்கு பெரிய அளவில் விரும்பவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

தனக்கு ஒரு தேவை என்றால் அதனை நிறைவேற்றி வைப்பதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் தயாராக இருக்கும் நிலையில் பதவி ஏற்கும் தயார் நிலையில் அவர் இல்லை என தெரியவந்துள்ளது.

அத்துடன் அரசாங்கத்திற்கு அவசியமான நேரத்தில் ஆலோசனை வழங்குவதற்கும் மஹிந்த ராஜபக்ச தயாராகவே உள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான சூழலில் பிரதமர் பதவியை ஏற்பதில் மஹிந்த ராஜபக்சவுக்கு மிகப்பெரிய அளவில் ஆர்வம் இல்லை என பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button